Date:

மருமகளுக்காக தீ குளித்த மாமியார்

 

இந்தியாவின் தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஐந்தாம்கட்டளை வடக்குத் தெருவை சேர்ந்த மணிமுத்துவின் மனைவியான 88 வயதான அன்னம்,  இவர்களது மகன் கண்ணன் (55). அன்னம் தனது சகோதரர் மகளான கவிதா என்பவரை கண்ணனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

தனது சொந்த அண்ணன் மகளே தனக்கு மருமகளாக வந்ததால் கவிதா மீது அன்னம் பாசமாக இருந்து வந்துள்ளார். சமீப காலமாக கவிதாவிற்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு ள்ளது. இதனால் அன்னம் மனமுடைந்து காணப்பட்டார்.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக அன்னத்தின் கனவில் அவர் இறந்தால் உனது மருமகள் உடல் நலம் சீராகும் என அசரீரி தோன்றியதாக தனது மகன் கண்ணனிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அன்னம் நேற்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த கடையம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருமகள் உடல்நலம் சீராக வேண்டி மூதாட்டி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தங்க விலையில் இன்றும் அதிகரிப்பு – புதிய விலை இதோ

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து வருவதன் காரணமாக இலங்கையில்...

புதிய 2,000 ரூபாய் நாணயத்தாளிலுள்ள அம்சங்கள்

நாட்டின் நடைமுறையிலுள்ள 2,000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது. இலங்கை...

ரமழான் சிறப்பு சுற்றறிக்கை வெளியானது

வரவிருக்கும் ரமழான் காலத்தில் மத அனுஷ்டானங்களை நிறைவேற்ற பொது அதிகாரிகளுக்கு சிறப்பு...

ஹல்துமுல்லையில் கோர விபத்து: சாரதி பலி

கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, ஹல்துமுல்லை -...