எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் தேசிய அடையாள அட்டை விநியோகிப்பதற்காக அறவிடப்படும் கட்டணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நேற்றைய தினம் (ஒக்.13) வெளியிட்டுள்ளார்.
புதிதாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக அறவிடப்படும் 100 ரூபா கட்டணம், தற்போது 200 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய அடையாள அட்டையில் திருத்தங்களை மேற்கொண்டு புதிதாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக இதுவரை அறவிடப்பட்ட 250 ரூபா என்ற கட்டணம், தற்போது 500 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன தேசிய அடையாள அட்டையை மீளப் பெற்றுக் கொள்வதற்காக அறவிடப்படும் கட்டணம் 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.