Date:

இலங்கை செல்வந்தர்களை ஏமாற்றிய பெண் – ஏமாற்றப்பட்டவர்கள் முறைப்பாடு செய்ய தவறுகின்றனர் – பொலிஸார்

உலக வர்த்தக மையத்தில் நிதி நிறுவனமொன்றை நடத்திச் சென்ற திலினி பியமாலி என்ற பெண்ணுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய மேலும் பல செல்வந்தர்கள், அவருடைய மோசடிக்குள் சிக்குண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த மோசடி தொடர்பில் குறித்த செல்வந்தர்கள் இதுவரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்யவில்லை என பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவத்துள்ளார்.

குறித்த செல்வந்தர்கள், தமக்கு ஏற்பட்ட இழப்பை தாங்கிக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஊழல் மோசடிக்குள் சிக்குண்டுள்ள செல்வந்தர்கள், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யும் பட்சத்தில், இவ்வளவு பெரிய தொகை நிதி எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து கேள்வி எழும் என்ற அச்சத்தினால், அவர்கள் அந்த இழப்பை தாங்கிக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த ஊழல் மோசடியுடன் தொடர்புடையதாக கூறப்படும் பெண்ணுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய அரசியல்வாதிகள், கலைஞர்கள் உள்ளிட்ட தரப்பினரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானில் பெய்யும் கறுப்பு மழையால் சுவாசப் பிரச்சினைகள்

ஈரானில் கறுப்பு மழை பெய்த நிலையில், கறுப்பு மழையும் அதனுடன் கலந்து...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...