Date:

காணாமல் போன பல்கலைக்கழக மாணவர் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் இல்லை

பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் போது காணாமல் போன மாணவன் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் கடவத்த-கனேமுல்ல பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு, அந்தப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மன அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குப் பின்னரான சூழலுக்கு ஏற்றவாறு செயற்பட முடியாததாலும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க முடியாததாலும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகாத வகையில் பாடப்பிரிவுகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“நீதிமன்ற கட்டமைப்பு டிஜிட்டல் மயமாகும்”

நாடு முழுவதும் நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதை விரைவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகப் புதிதாக...

கினிகத்தேன விபத்தில் கொழும்பு பெண் பலி

கொழும்பு மருதானையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில்...

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள ரோஹிதவின் மகள்

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் இன்று (31)...

பலஸ்தீன தேசத்தை ஆதரிக்கிறேன், பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான பிரிட்டனின் முடிவை வரவேற்கிறேன்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான பிரிட்டன் பிரதமரின் முடிவை வரவேற்பதாக  நாடாளுமன்ற உறுப்பினர் உமா...