Date:

காணாமல் போன பல்கலைக்கழக மாணவர் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் இல்லை

பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் போது காணாமல் போன மாணவன் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் கடவத்த-கனேமுல்ல பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு, அந்தப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மன அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குப் பின்னரான சூழலுக்கு ஏற்றவாறு செயற்பட முடியாததாலும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க முடியாததாலும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகாத வகையில் பாடப்பிரிவுகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் விரான் சமுதித்த சாதனை

இளையோர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஜப்பான் அணிக்கு எதிரான போட்டியில் 192...

காசாவின் அமைதிக்கான சபையின் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியானது

காசாவின் அமைதிக்கான சபையின் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. அமெரிக்க...

விபத்தில் சிக்கிய அசோக ரன்வலவின் மனைவி!

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி கார் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில்...

மலையக மக்களுக்கு வடக்கில் வீடுகள்.!

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கு, வடக்கில் வீடுகளை அமைப்பதற்கான நிதியுதவியை...