Date:

30 நாட்களாக தொடரும் இணையவழி கற்பித்தல் புறக்கணிப்புப் போராட்டம்

ஆசிரியர் மற்றும் அதிபர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும், இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கை, இன்றுடன் ஒரு மாதத்தை அடைகின்றது.

வேதன பிரச்சினையை முன்வைத்து, ஆசிரியர் மற்றும் அதிபர்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில், ஆசிரியர் சங்கங்கள் நேற்றைய தினம் அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் சிலவற்றுடன் கலந்துரையாடைலை முன்னெடுத்திருந்தன.

தங்களது தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குமாறு கோரி, ஆசிரியர் சங்கங்கள் இந்த கலந்துரையாடலை நடத்தியுள்ளன.

கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து நாளைய தினம் சத்தியாகிரக போராட்டம் ஒன்றினை மேற்கொள்ள இணக்கப்பாடு எட்டப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தங்க விலையில் இன்றும் அதிகரிப்பு – புதிய விலை இதோ

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து வருவதன் காரணமாக இலங்கையில்...

புதிய 2,000 ரூபாய் நாணயத்தாளிலுள்ள அம்சங்கள்

நாட்டின் நடைமுறையிலுள்ள 2,000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது. இலங்கை...

ரமழான் சிறப்பு சுற்றறிக்கை வெளியானது

வரவிருக்கும் ரமழான் காலத்தில் மத அனுஷ்டானங்களை நிறைவேற்ற பொது அதிகாரிகளுக்கு சிறப்பு...

ஹல்துமுல்லையில் கோர விபத்து: சாரதி பலி

கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, ஹல்துமுல்லை -...