Date:

எரிபொருள் விநியோகம் மீண்டும் வழமைக்கு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் உறுதிமொழி மீறப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முதல் (04) விநியோக சேவை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை முதல் மீண்டும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்க இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்தார்.

செயற்பாட்டுக் கட்டணங்களுக்கு வழங்கப்பட்ட 45% தள்ளுபடியை மீளப்பெறும் கூட்டுத்தாபனத்தின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பணம் நேற்று கழிக்கப்பட்டிருந்ததாகவும் அது மீண்டும் இன்று வங்கிகளில் வரவு வைக்கப்பட்டதையடுத்தே பகிஷ்கரிப்பை கைவிடத் தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

விநியோகஸ்தர்களின் பகிஷ்கரிப்பு காரணமாக இன்றையதினம் பல எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...