கம்பஹா தங்கோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 29 வயதுடைய பெண்ணொருவர் எனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.