Date:

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெறுமதியான தங்கத்துடன் நால்வர் கைது!

17 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த மூவரிடமிருந்து 7 கிலோ 500 கிராம் எடையுடைய 16 கோடி ருபாய் பெறுமதியான தங்கம் மீட்கப்பட்டது.

குறிப்பாக, சூட்சமமான முறையில் தனது பயணப்பையில் தங்கத்தை மறைத்து கொண்டு வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த விமானத்திலேயே நாட்டிற்கு வருகை தந்த நபர் ஒருவர் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்..

கைது, செய்யப்பட்டவர்களை கட்டுநாயக்க காவல் துறையினரிடம் ஒப்படைக்க கட்டுநாயக்க சுங்க அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...