Date:

சர்வதேச புகைப்பட தினத்தில் HNB FINANCE ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு

HNB FINANCE PLC சர்வதேச புகைப்பட தினத்துடன் இணைந்து சமூக ஊடக வலையமைப்பு மூலம் புகைப்பட போட்டியை கடந்த ஆகஸ்ட் 19ம் திகதி நடத்தியது. வாழ்வின் பொன்னான தருணங்கள் மற்றும் கொண்டாட்டங்களை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் இதற்கு அடிப்படையாக பயன்படுத்தப்பட்டதுடன், போட்டிக்காக நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகளை சித்தரிக்கும் ஏராளமான புகைப்படங்கள் பெறப்பட்டன.

HNB FINANCE PLCஇன் சந்தைப்படுத்தல் பிரிவின் பிரதானி உதார குணசிங்க, புகைப்படப் போட்டி குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களுக்கு உயர் நிதிச் சேவையை உறுதிப்படுத்தவும், அவர்களின் நினைவுகளில் வாழ்க்கையின் சிறப்பு நினைவுகளை அவர்களுக்கு வழங்கவும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இந்த ஆண்டு சர்வதேச புகைப்பட தினத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போட்டியின் மூலம் காட்சிப்படுத்தப்பட்டமைக்கான மதிப்பை நாங்கள் எதிர்பார்த்தோம். அந்த தருணங்களை புகைப்படம் எடுத்தவர்கள் திறந்த போட்டியின் மூலம் பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பை உருவாக்கவும் நாங்கள் பணியாற்றினோம்.” என தெரிவித்தார். போட்டியில் பங்கேற்க, பங்குபற்றியவர்கள் HNB FINANCE இன் Facebook மற்றும் Instagram கணக்குகள் ஊடாக உள்நுழைந்து அதன் அறிவுறுத்தல்களின்படி போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது. போட்டிக்கு DSLR கமரா அல்லது கையடக்கத் தொலைபேசிக் கமெராவைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களைச் சமர்ப்பித்தது சிறப்பு என்பதுடன் இதன் மூலம் பலர் தங்களது வடிவங்களை போட்டிக்கு வழங்கும் வாய்ப்பை அளிக்கப்பட்டது.

இந்த போட்டி ஆகஸ்ட் 18, 2022 அன்று முடிவடைந்தது மற்றும் வெற்றியாளர்கள் ஆகஸ்ட் 19, 2022 அன்று அறிவிக்கப்பட்டனர். இதன்படி, ஆக்கப்பூர்வமான விளக்கக்காட்சிகள் மற்றும் வெளிப்படுத்தப்பட்ட திறமை ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பெறுமதியான பரிசுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மீண்டும் ஜனாதிபதியாகும் ரணில் விக்கிரமசிங்க..!

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில்...

கெஹெலியவுக்கு எதிரான வழக்கு : நீதியரசரிடம் சட்டமா அதிபர் கோரிக்கை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக,...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஆணைக்குழு அறிக்கையை ஆராய நால்வரடங்கிய குழு நியமனம்

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராயக்...

தபால் மூல வாக்களிப்புக்கு அலுவலக அடையாள அட்டை ஏற்கப்பட மாட்டது

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின்போது, ஆள் அடையாளத்தை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373