Date:

தென் கொரியா, ஜப்பானில் தொழில் பெற்றுக்கொடுக்கும் பண மோசடி வெளியானது

தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு கைது செய்துள்ளது.

இளைஞர், யுவதிகளை தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு வேலை வாய்ப்புகளுக்காக அனுப்புவதாக தெரிவித்து, குருநாகல் நகரின் பிரதான இடமொன்றில் இந்த நபர்கள் பண சேகரிப்பில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு செல்வதற்காக நபரொருவரிடமிருந்து முற்பணமாக 1500 ரூபாவை இந்த நபர்கள் அறவிட்டு வந்துள்ளனர்.

இதன்படி, குறித்த இடத்திலிருந்து 77000  ரூபா பணம் மற்றும் மேலும் சில பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, இரண்டு லட்சம் ரூபா வீதமான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யுனெஸ்கோவிலிருந்து விலகிய அமெரிக்கா!

யுனெஸ்கோவின் உறுப்புரிமையிலுருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சார மற்றும்...

மகனின் கைது குறித்து சபையில் உணர்ச்சிவசமானார் ஜகத்

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் விற்ற வாகனம் தொடர்பாக தனது...

Breaking பேஸ்லைன் வீதியில் பாரிய வாகன நெரிசல் மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள், இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கு...

எரிபொருளுக்கு விதிக்கப்பட்ட 50 ரூபாய் வரி நீக்கம் மகிழ்ச்சியான செய்தி வெளியானது

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பழைய கடன்கள் முழுமையாக செலுத்தப்பட்டதும், எரிபொருள் லிட்டருக்கு...