Date:

தலைக்கவசத்தால் இராஜாங்க அமைச்சரை தாக்கிய நபர்கள்! விசாரணை ஆரம்பம்

ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மீது மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

திங்கட்கிழமை மாலை பதுளை பண்டாரநாயக்க மாவத்தையில் வைத்து ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இருவரால் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளையில் உள்ள உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான கடைக்கு அருகில் அமைச்சர் தனது காரை நிறுத்தி உரையாடலில் ஈடுபட்டதை அடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

மதுபோதையில் இருவர் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், மோட்டார் சைக்கிளில் வந்த தலைக்கவசத்தால் அவரை தாக்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று முதல் GovPay ஊடாக அபராதம் செலுத்தும் முறை

இன்று (28) முதல் மேல் மாகாணத்தில் GovPay ஊடாக நேரடியாக அபராதம்...

திலினி பிரியமாலி கைது

ஹோமாகம நீதிமன்றத்தில் அதிகாரி ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் திலினி...

பொரளையில் பாரிய விபத்து இதுவரையில் ஒருவர் பலி 50க்கும் மேற்பட்டோர் காயம்

பொரளையில் கல்லறை சுற்றுவட்டத்திற்கு அருகில் திங்கட்கிழமை (28) காலை இடம்பெற்ற விபத்தில்...

இரண்டு ஆண்கள் எப்படி ஒரு குடும்பத்தை உருவாக்க முடியும்?

பேருவளையில் உள்ள புனித மரியா தேவாலயத்தில் நடைபெற்ற மத விழாவில் உரையாற்றிய...