Date:

ஒக்டோபர் முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதி கடுமையானதாக அமையும்

உலகில் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளை உள்ளடக்கி வரைபடம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

உலக உணவு திட்டத்தினால் குறித்த வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.

உலக உணவு திட்டத்தின் வரைப்படத்திற்கு அமைவாக மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, தெற்கு, மற்றும், வடமேல் ஆகிய மாகாணங்கள் உணவு அபாய வலயங்களாக இனங்காணப்பட்டுள்ளன.

அத்துடன் இலங்கை மக்களின் சனத்தொகையில் 63 இலட்சம் மக்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என உலக உணவு திட்டம் அறிவித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பினால் 60 சதவீதமான மக்கள் போசாக்கு குறைந்த உணவையே உட்கொள்கின்றனர்.

இலங்கையின் இந்த நிலையை சீர் செய்வதற்கு விரைந்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லையாயின், எதிர்வரும் ஒக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதி மிகவும் கடுமையானதாக அமையும் என உலக உணவு திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள் மடம்: உயிருடன் இருந்தால் தண்டனை”

குருக்கள் மடம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது நீதி கிடைக்கும். அதேநேரம்...

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...