Date:

நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள்

நாட்டில் கடந்த சில மாதங்களாக தொடரும் பொருளாதார நெருக்கடி காரணமாக பல இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ள நிலையில் , அவர்களில் பலர் தொழில் வாய்ப்புத் தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர் என்று தகவல் வெளியேறியுள்ளதுடன் இன்னும் பலர் நாட்டை விட்டுச் செல்ல தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை நாட்டில் தற்போது கட்டுமானத் துறையில் சிமெந்து , கம்பி மற்றும் இதர பொருள்களின் விலையேற்றம் காரணமாக பலர் வேலை இழந்துள்ளனர் .

இந்த வருடத்தில் இதுவரை 2 லட்சத்து 21 ஆயிரத்து 23 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக நாட்டை விட்டு வெளி யேறியுள்ளனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் செனரத் யாப்பா தெரி வித்துள்ளார் .

அதேநேரம் , இந்த வருடத்தில் நாட்டிலிருந்து மூன்று இலட்சம் பேரை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்புவதே வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இலக்கு எனவும் அவர் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐரோப்பாவில் சாதித்துக் காட்டிய மன்னார் இளைஞர்

மன்னார் – விடத்தல்தீவைச் சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி...

Breaking சீதுவையில் துப்பாக்கிச் சூடு

சீதுவை, ராஜபக்ஷபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து...

ரோஹிதவின் மகள் மற்றும் மருமகனுக்கு பயணத் தடை

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகனுக்கு வெளிநாட்டுப் பயணத்...

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் 30 நிமிடங்கள் நீட்டிப்பு

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக...