Date:

அமில தாக்குதல் மேற்கொண்டு கணவனை கொலை செய்த மனைவி

கணவன் மீது அமில தாக்குதல் மேற்கொண்டு கணவனை படுகொலை செய்தார் என குற்றம் சாட்டி உயிரிழந்தவரின் மனைவியான பெண் சட்டத்தரணி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டள்ளனர்.

அகலவத்தை பகுதியில் அமில தாக்குதலுக்கு இலக்கான நிலையில், அப்பகுதியை சேர்ந்த 42 வயதான குடும்பஸ்தர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சகோதரி தனது சகோதரனை, சகோதரனின் மனைவி, மனைவியின் சிறிய தந்தை மற்றும் சகோதரன் ஆகியோரே படுகொலை செய்தனர் என பொலிஸாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

அவரது வாக்கு மூலத்தின் பிரகாரம் உயிரிழந்தவரின் மனைவியான 38 வயதான சட்டத்தரணி, மனைவியின் சிறிய தந்தையான 68 வயதுடைய நபர் மற்றும் சகோதரனான 36 வயதுடைய நபர் ஆகிய மூவரையும் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளின் போது உயிரிழந்த நபர் தனக்கு தானே அமிலத்தை ஊற்றிக்கொண்டார் என மூவரும் தெரிவித்துள்ளனர்.

மூவரிடமும் தொடர் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...