Date:

கசினோ சூதாட்ட நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரம்

புதிய கசினோ சூதாட்ட நிறுவனங்களுக்கு அனுமதி பத்திரம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கசினோ சூதாட்டத்தை சட்ட ரீதியானதாக மாற்றுதல் மற்றும் அதனை ஒழுங்குபடுத்தல், புதிய அனுமதிப்பத்திரம் வழங்குதல் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் கசினோ வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே தற்பொழுது அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டு 17ம் இலக்க கசினோ வியாபாரம் குறித்த சட்டத்தின் பிரகாரம் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டும்.

இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படாத காரணத்தினால் இதுவரையில் குறித்த சட்டத்தின் கீழ் எந்தவொரு நிறுவனத்திற்கும் அனுமதிப் பத்திரம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் புதிய கசினோ நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கசினோ வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களிடமிருந்து முறையாக வரிகளை வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வட மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை...

சிறி தலதா வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்கான அறிவிப்பு

சிறி தலதா வழிபாட்டிற்காக அதன் வளாகத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஜனாதிபதி ஊடகப்...

மீண்டும் ஜனாதிபதியாகும் ரணில் விக்கிரமசிங்க..!

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில்...

கெஹெலியவுக்கு எதிரான வழக்கு : நீதியரசரிடம் சட்டமா அதிபர் கோரிக்கை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக,...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373