Date:

சமையல் அறைக்குள் புகுந்து உணவை திருடி தின்ற நபர் – பொலிஸில் முறைப்பாடு

கேகாலை தேவாலகம பிரதேசத்தில் வீடொன்றின் சமையல் அறைக்குள் புகுந்த திருடன், அங்கிருந்த சோற்றை சாப்பிட்டு விட்டு, மரக்கறிகளை எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெண்ணொருவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டு உரிமையாளரான பெண் தனது மகளுடன் வீட்டுக்குள் உறங்கிக்கொண்டிருந்த போது, சமையல் அறையின் ஜன்னல் வழியாக நுழைந்த நபர் அங்கு சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டுள்ளதுடன் மரக்கறிகளை திருடிச் சென்றுள்ளார்.

இரவு சாப்பிடுவதற்காக சம்பல், நெத்திலி பொறியலும் காலையில் சாப்பிட சீனி சம்பலும் தயாரித்து வைத்திருந்துள்ளனர். இரவு சாப்பிட்டு விட்டு நித்திரைக்கு சென்ற இந்த சம்பவம் நடந்துள்ளதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking:கோட்டை நீதிமன்ற வளாகத்தில் பதற்றநிலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து கொழும்பு...

ரணில் விளக்கமறியலில் அடைப்பு…!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க...

Breaking ரணிலுக்கு பிணை

கோட்டை நீதவான் நீதிமன்றம் ரணிலுக்கு பிணை வழங்கியது. அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய...

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ரணில்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...