Date:

தாமரை கோபுரம் இன்று முதல் மக்கள் பார்வைக்கு

தெற்காசியாவின் மிக உயரமான கட்டடமாகக் கருதப்படும் தாமரைக் கோபுரம் இன்று(15) முதல் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படவுள்ளது.

தாமரைக் கோபுரத்தை திறக்கும் முதல் கட்டம் இதுவாகும்.

இரண்டாம் கட்ட செயற்பாடுகள் இன்னும் 2 மாதங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் மூன்றாம் கட்ட திறப்பு விழாவை அடுத்த வருடம் மார்ச் மாதம் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு தாமரை கோபுர தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோபுரத்தின் கீழ் பகுதி 3 தளங்களைக் கொண்டுள்ளதுடன் குறித்த பகுதியில் டிஜிட்டல் திரையரங்கு, மாநாட்டு அரங்கம், வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான அலுவலக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மூன்றாவது மற்றும் நான்காவது மாடிகள் திருமண நிகழ்வுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன் ஐந்தாவது மாடியில் சுழலும் ஹோட்டல் அமைந்துள்ளது.

ஆறாவது மாடியில் 6 சொகுசு அறைகள் கட்டப்பட்டுள்ளதுடன் ஏழாவது மாடி பார்வையாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கொழும்பு தாமரை கோபுர வளாகத்திற்கு நேற்று(14) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபாநாயகரினால் கௌரவிக்கப்பட்ட பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி ஹனான் அமின்

சபாநாயகரினால் கௌரவிக்கப்பட் திறமைகளை வெளிக்காட்டிய பாராளுமன்ற உத்தியோகத்தர்களினது பிள்ளைகளைக் கௌரவித்து புலமைப்பரிசில் மற்றும்...

ஹரிணி சீனாவுக்கு…

பிரதமர் ஹரிணி அமரசூரிய, ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்க...

மீண்டும் இலங்கையில் தேர்தல்

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

இன்று கடையடைப்பு! யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலை..

வடக்கு - கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் இன்றையதினம் மேற்கொள்ளப்படும் என்று...