Date:

அரச ஊழியர்களுக்கு நியமனம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்

அத்தியாவசியமற்ற  அரச ஊழியர்களுக்கு நியமனம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை  மனித வளம் தேவைப்படும் நிறுவனங்களுக்கு  ஏனைய சில நிறுவனங்களில் மேலதிகமாகவுள்ள ஊழியர்களை  சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை  முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சர் ரமேஸ் பத்திரண இதனை தெரிவித்தார்.

இதேவேளை அரச  ஊழியர்களை சேவையில்  நியமிப்பது தொடர்பில்  மறுசீரமைப்புகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது  தொடர்பில் தீர்மானங்களை முன்னெடுக்க பிரதமர் தினேஸ் குணவர்த்தன தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்  அரச சேவைவயை  முறையாகவும் செயற்பாட்டு ரீதியாகவும்  உயர்ந்த மட்டத்தில் கொண்டு நடத்துவதற்காக  அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் இவர் தெரிவித்தார்.

அதன்படி  சில நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பில் உரிய தீர்மானங்களை மேற்கொள்ளவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அஞ்சல் கட்டணங்கள் அதிரடியாக அதிகரிப்பு

உள்நாட்டு தபால் கட்டணங்கள் திங்கட்கிழமை (09) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அஞ்சல் மா...

25 தொன் ஈச்சம் பழங்களை வழங்கியது குவைத்

எதிர்வரும் வாரம் அனுஷ்டிக்கப்பட உள்ள புனித நோன்பு ரமலான் மாதத்தை முன்னிட்டு...

அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைப்படம்! அதிர்ச்சியில் பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகள்

அமெரிக்கா, இந்தியாவுடன் தனது வலுப்பெறும் மூலோபாய உறவுகளை வெளிப்படுத்தும் வகையில், ஜம்மு–காஷ்மீர்...

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக,...