Date:

10 மணித்தியாலம் வரை மின்சாரம் தடைப்படும் அபாயம்

நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் எதிர்காலத்தில் ஒரு நாளைக்கு சுமார் 10 மணித்தியாலம் வரை மின்சாரம் தடைப்படும் எனவும், இதற்கு இலங்கை மக்கள் தயாராக வேண்டும் எனவும்  இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர எச்சரித்துள்ளார்.

2022 ஒக்டோபருக்குள் இலங்கை மின்சார சபைக்கு போதுமான நிலக்கரி கையிருப்பு கிடைக்காவிட்டால், மின்சார உற்பத்தியைக் குறைக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.

தற்போது நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறப்படுவதாகவும், மழைக்காலம் முடிவடையும் போது இலங்கையில் நீர் மின் உற்பத்தியில் பாரிய சிக்கல்கள் ஏற்படும் எனவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், நுரைச்சோலை மின்நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் பராமரிப்பு காரணமாக இயங்கவில்லை என்றும், நவம்பர் 2022க்குள் அதை தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்க முடியும் என இலங்கை மின்சார சபை நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தண்டனை சட்டவிரோதம்! | மஹிந்தானந்த எடுத்த அதிரடி தீர்மானம்!

உயர் நீதிமன்றம் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தை எதிர்த்து முன்னாள்...

அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி..!

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது  அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின்...

அனைத்து கல்வி தொழிற்சங்கங்களுடன் இணைந்து வேலை நிறுத்தம்

தனியார் பல்கலைக்கழகங்கள் மூலம் கல்வி இளங்கலைப் பட்டம் பெற்ற ஏராளமானோருக்கு அரசாங்கம்...

இன்று வேலை நிறுத்திய மருத்துவர்கள்!

அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் இன்று (09) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373