பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்புடன் நுகர்வோர் பேக்கரி உற்பத்திகளை கொள்வனவு செய்யாத நிலை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த நிலை காரணமாக உணவகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக உணவக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையில், வாடகை அடிப்படையில் நடத்தப்படும் சுமார் 35 வீதமான உணவகங்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.