Date:

இறக்குமதி இடைநிறுத்தம்; அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?

அரிசி இறக்குமதியை இடைநிறுத்துவதற்கான எழுத்துமூல அறிவித்தல் ஏற்கனவே உரிய அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு போகத்தில் மொத்தம் 512,000 ஹெக்டேர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கம் 275,000 ஹெக்டேர் நெற்செய்கைக்காக மதிப்பீடு செய்திருந்தது. ஆனால் கடினமான சூழ்நிலையிலும் விவசாயிகள் தங்கள் வயல்களில் வெற்றிகரமாக செய்கை செய்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

நெல் கொள்வனவு செய்வதற்கு இரண்டு பில்லியன் ரூபா தேவைப்படுகிறது மற்றும் இரண்டு அரச வங்கிகள் ஊடாக ரூபா 250 மில்லியன் ரூபா ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் மேலும் ரூ.300 மில்லியன் கிடைக்கும். இரண்டு அரச வங்கிகளில் இருந்து தொகையைப் பெறுவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அமெரிக்காவை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

அமெரிக்காவின் (USA) அலாஸ்கா மாநிலத்தின் கடற்கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக...

இன்று மீண்டும் கூடவுள்ள குழு

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய...

ரூ.18 கோடியை ஏப்பம் விட்ட வங்கி அதிகாரி கைது

அரச வங்கியொன்றின் முன்னாள் அதிகாரி ஒருவர், வங்கியின் தலைமை அலுவலகத்தில் நிதி...

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதல்

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதலில் பலியானோர் எண்ணிக்கை 203ஆக உயர்ந்துள்ளது. தெற்கு சிரியாவில்...