Date:

வரிசையில் நின்றாலும் பாண் ஒன்றை வாங்க முடியாத நிலை ஏற்படும்! எச்சரிக்கை

இலங்கையில் ஒரு மாதத்திற்குள் கோதுமை மா பிரச்சினையை அரசாங்கம் தீர்க்காவிட்டால் நாட்டில் பாண் உட்பட பேக்கரி உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் வரிசையில் நின்றாலும் பாண் ஒன்றை வாங்க முடியாத நிலை ஏற்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் இருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்த டுபாய் மற்றும் சிங்கப்பூர் நிறுவனங்கள் 700 மில்லியன் டொலர்களுக்கு மேல் கடனாக உள்ளதால், டொலரில் கைப்பணம் செலுத்தி மாவை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவித்துள்ளது.

கடந்த காலங்களில் இந்தியாவில் இருந்து கோதுமை மா இறக்குமதி செய்யப்பட்ட போதிலும், அந்த நாட்டின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதால் இந்தியாவில் இருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் 50kg கோதுமை மா 8000 – 9000 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது கறுப்புச் சந்தையில் 25000 ரூபாவாக உயர்ந்துள்ளது.

அந்த விலையில் உற்பத்தி செய்தால் பாண் ஒன்றின் விலை 350 ரூபாவைத் தாண்டும். தின்பண்டங்கள் விலை 150 ரூபாவைத் தாண்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

4 ஊடகவிலாளர்கள் தியாகிகள் ஆகினர்

காசா நாசர் மருத்துவமனை மீது இன்று (25) திங்கட்கிழமை இஸ்ரேலிய தாக்குதலில்...

வித்தியா கொலை குற்றவாளிகளின் மேன்முறையீடு

2015ஆம் ஆண்டு புங்குடுத்தீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல்...

ரணிலை பார்வையிடவில்லை“ பிரதமர் விளக்கம்

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, திருமதி மைத்ரி விக்கிரமசிங்கவுடன் இணைந்து முன்னாள்...

முன்னாள் அமைச்சர்களின் பிணை கோரிக்கை விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் சார்பில்...