இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் செயற்குழு உடன்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்காலத்தில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் டொலர்களை விரிவான நிதியுதவி வசதிகளைப் பெறும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.