Date:

சிசுவைக் கைவிட்டுச் சென்ற நபரைத் தேடி பொலிஸார் விசாரணை

பண்டாரவளை – அம்பேகொடயில் சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வாகன திருத்துமிடத்தில் சிசு ஒன்றை கைவிட்டுச் சென்றவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இன்று (31) பகல் 12 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிறந்து சுமார் ஒரு மாதம் மதிக்கத்தக்க சிசுவொன்றை தூக்கி வந்த ஆண் ஒருவர், அதனை கைவிட்டுச் சென்றுள்ளார்.

குழந்தையின் அழுகுரல் கேட்ட வாகன திருத்துமிட உரிமையாளர் குழந்தையை பாதுகாப்பாக மீட்டு, பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

பின்னர் அங்கிருந்த குழந்தை பராமரிப்பு நிலையத்திற்கு சிசுவைக் கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் அங்கு வந்த பண்டாரவளை தலைமையக பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் குழந்தையை பாலூட்டி அரவணைத்துள்ளார்.

வைத்திய பரிசோதனைகளுக்காக, குழந்தை தியத்தலாவை வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளது.

குழந்தையை கைவிட்டுச்சென்ற சந்தேகநபரைத் தேடி, பண்டாரவளை தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15)...

இன்று முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று முதல் (15) குறைவடையும் என...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம்!

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு...

பால் மாவின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக...