சுமார் 15 கோடியே 70 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் தீர்வை வரியின்றிய வர்த்த வளாகமொன்றின் ஊழியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
6 கிலோ 995 கிராம் நிறையுடைய 60 தங்க பிஸ்கட்களை சந்தேகநபர் விமான நிலையத்திலிருந்து வௌியே கொண்டுசெல்ல முற்பட்டபோதே கைது செய்யப்பட்டதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் ஜா-எல பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.