Date:

வெள்ள அபாய எச்சரிக்கை

நீர்பாசன திணைக்களம் இன்று இரவு முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அத்தனகலு, களு, களனி, ஜிங், நில்வலா மற்றும் மகாவலி ஆறுகளில் தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படக் கூடும் என குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்து அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் மேலும் கோரியுள்ளது.

ஆறுகள் மற்றும் துணை நதிகளை பயன்படுத்தும் போது பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேற்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜபக்சர்களின் குடும்பத்தில் விரைவில் கைதாகவுள்ள முக்கிய நபர்

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கங்களின் போது...

மட்டக்குளியில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது

மட்டக்குளிய சமித் பகுதியில் T-56 துப்பாக்கியை வைத்திருந்த மட்டக்குளியவைச் சேர்ந்த 36...

நாளை முதல் சில பகுதிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள ரயில் சேவைகள்

பொசன் பண்டிகையை முன்னிட்டு ரயில் திணைக்களம் விசேட ரயில் சேவைகளை இயக்கவுள்ளதாக...

அதிகரிக்கப்படும் சீமெந்து மூட்டையின் விலை?

50 கிலோ சீமெந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373