நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது இயந்திரத்தின் மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அண்மையில் இயந்திரத்தின் ஒரு பகுதி செயலிழந்தமை காரணமாக திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்திலுள்ள இரண்டாவது இயந்திரம் பராமரிப்பு பணிகள் காரணமாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, நீர் மின் உற்பத்தி தற்போது 50 வீதமாக காணப்படுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.