Date:

சீனர்களை நம்பும் அளவிற்கு தமிழர், முஸ்லிம்களை நம்பவில்லை – விக்னேஸ்வரன்

பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து நாடு மீளவேண்டும் என்றால் சிங்களவர்களும் தமிழர்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், சிங்கள மக்கள் தமிழ், முஸ்லிம் மக்களுடன் ஒன்றிணைந்து நாட்டை மீட்டெடுக்க இதுவே சரியான நேரம் எனக் கூறினார்.

ஆனால் சிங்கள ஆட்சியாளர்கள் சீனர்களை நம்பும் அளவிற்கு தமிழர்களையும் முஸ்லிம்களையும் நம்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நடவடிக்கையே இன்று நாடு நெருக்கடிக்குள் தள்ளப்பட பிரதான காரணமாக அமைந்தது என்றும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து, முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டுவந்து புலம்பெயர் மக்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள சிங்கள மக்கள் முன்வர வேண்டும் என கூறினார்.

நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்கு கைகொடுக்க தமிழர்கள் தயாராகவே உள்ளனர் என்பதை அரசாங்கத்திற்கும், சிங்கள மக்களுக்கும் கூறிக்கொள்ள விரும்புவதாக சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாராளுமன்ற அமர்வு இன்று நண்பகலுடன் ஒத்திவைப்பு

பாராளுமன்றம் ஆரம்பமானதைத் தொடர்ந்து இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் எடுக்கப்பட்ட...

Just in சிலாபம் மருத்துவமணையில் நோயாளர்கள் மீட்பு

சிலாபம் மருத்துவமணையில் இருந்த நோயாளர்களை பாதுகாப்பாக வெளியேற்றிய இலங்கை விமானப்படையினர். நாட்டில் ஏற்பட்ட...

அபாயகரமான வெள்ள நிலைமை; ஹங்வெல்ல நிலைமை மோசம்

களனி கங்கை ஆற்றுப்படுகையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால், ஹங்வெல்ல மற்றும் அதனை...

மரக்கறிகளின் விலைகள் கிடுகிடுவென உயர்வு

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் சடுதியாக...