Date:

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் கைது

மாலபே பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமொன்றுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டியில் வருகைத் தந்து தங்கச் சங்கிலி மற்றும் பணத்தை அபகரித்துச் சென்றதாக கொட்டாவ பொலிஸ் நிலையத்தில் நபரொருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் மாலபே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வலஸ்முல்ல-கொக்கல்லான பகுதியில் வசித்துவரும் நபரே இவ்வாறு முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இங்கிலாந்துக்கு எதிரான முதல் வெற்றியை தட்டிப்பறித்த சிங்கக் குட்டிகள்!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்...

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை ஒதுக்கி...

இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் SLPP!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை...

இவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால், உடனே அறிவிக்கவும்!

தெஹிவளை பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி, 16 வயது...