நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 66 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த அனைவரும் உள்நாட்டு பிரஜைகள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 69 ஆயிரத்து 33 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை நேற்றைய நாளில் 4 கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறித்த கொரோனா மரணங்கள் 20 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.