Date:

சஜித் பிரேமதாஸ கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொணடார்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, இன்று (03) கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

வைத்தியரின் ஆலோசனையின் பேரில் தடுப்பூசி பெற நடவடிக்கை எடுத்ததாக எதிர்க்கட்சி தலைவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு கொவிட் சிகிச்சை அளித்த வைத்தியர்களின் கடுமையான ஆலோசனையின் பேரில், இன்று தடுப்பூசி போடப்பட்டதாகவும் தடுப்பூசி போடத் தவறினால், தான் மீண்டும் கொவிட் தொற்றுக்குள்ளாகலாம், அது ஆபத்தானது என்று வைத்தியர்கள் கடுமையாக எச்சரித்தனர் என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், தனது தற்போதைய உடல்நிலையின் படி, அவர்களின் உத்தரவை ஏற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீண்டும் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட...

ரூ.10 லட்சம் செலுத்த தோனிக்கு உத்தரவு

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிரான மானநஷ்ட வழக்கில் தொடர்புடைய குறுந்தகட்டை...

இலங்கை – ஆஸி போட்டியின் டிக்கட்டுக்கள் விற்றுத்தீர்ந்தன!

உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரில் எதிர்வரும் (16) திங்கட்கிழமை இடம்பெறவுள்ள...

குடிவரவு, குடியகல்வு திணைக்கள தரவுக் கட்டமைப்பு வழமைக்கு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவு கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழிநுட்ப கோளாறு...