Date:

அரசாங்க ஊழியர்களை வேலைக்கு அழைப்பதை கட்டுபடுத்துவதற்கு தீர்மானம்

அத்தியாவசியமற்ற அரசாங்க ஊழியர்களை  பணிக்கு  அழைப்பதை கட்டுப்படுத்துமாறு வெளியிடப்பட்ட  சுற்றறிக்கை ஓகஸ்ட்  24ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு  விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து சிக்கல்களை கருத்திற்கொண்டு  கடந்த ஜூலை 24ஆம் திகதி முதல் அமுலாகும்  வகையில் ஒரு மாத காலத்திற்கு குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, அத்தியாவசிய பொது சேவைகளை முன்னெடுப்பதற்கு தேவையான ஊழியர்கள் மாத்திரமே  அலுவலக கடமைகளுக்கு அழைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அலுவலகத்திற்கு உள்வாங்கப்படும் பணியாளர்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் முன்னெடுக்கும்  அதிகாரம்  சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தலைவருக்கு  காணப்படுவதாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரசன்ன ரணதுங்க கைது

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் சற்றுமுன்னர்...

வெடித்து சிதைந்த சி-130 விமானம் – 20 பேர் உயிரிழப்பு!

துருக்கி இராணுவத்துக்கு சொந்தமான சி–130 ரக சரக்கு விமானம் நேற்று அசர்பைஜானில்...

அரசுக்கு எதிரான பேரணியில் இருந்து விலகிய மரைக்கார்

நுகேகொடயில் எதிர்வரும் 21ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில், ஜக்கிய மக்கள்...

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் இந்தியா குற்றவாளி!

இந்தியாவின் ஆதரவுடன் செயற்பட்ட பயங்கரவாதிகளே இஸ்லாமாபாத் தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் பிரதமர்...