Date:

திருத்தப்பட்ட அஞ்சல் கட்டணங்கள் நாளை முதல் அமுல்

திருத்தப்பட்ட உள்ளூர் அஞ்சல் கட்டணங்கள் நாளை (15) முதல் அமுலாக்கப்படவுள்ளதாக அஞ்சல்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 15 ரூபாவாக காணப்பட்ட சாதாரண அஞ்சல் கட்டணம் 50 ரூபாவாக திருத்தப்பட்டுள்ளது.

மேலும், அனுமதிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அஞ்சல் சலுகை கட்டணமும் திருத்தப்பட்டுள்ளது. 20 கிராமுக்கு 12 ரூபாவாக காணப்பட்ட குறித்த கட்டணம் 30 ரூபாவரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பதிவுத் தபால் கட்டணம் 30 ரூபாவிலிருந்து 60 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்தினால் பொறுப்பேற்கப்படும், கொழும்பு 1 முதல் 15 வரையான பிரதேசங்களுக்கு இடையிலான கடிதங்களுக்கான கட்டணம் 12 ரூபாவிலிருந்து 30 ருபாவாக திருத்தப்பட்டுள்ளது.

அத்துடன், காசுக்கட்டளை, பொதிகள் சேவை கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி வீரர்கள் நாடு திரும்ப தீர்மானம்?

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் 16 வீரர்கள்...

வரலாற்று சிறப்புமிக்க இலங்கை – சவுதி அரேபியா வர்த்தக மன்றம் ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க இலங்கை - சவுதி அரேபியா வர்த்தக மன்றம் ஆரம்பித்து...

ID வழங்கும் பணியை விரைவுபடுத்தவும்: ஜனாதிபதி

தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதில் தற்போது நிலவும் தாமதத்தை துரிதமாக சீரமைப்பதற்குத்...

எதிர்பார்த்த வருமான இலக்கை எட்டிய சுங்கம்!

இலங்கை சுங்கத்தினால் இந்த ஆண்டுக்குள் ஈட்டவேண்டிய வருவாய் இலக்கை நேற்றைய (11)...