Date:

புதிய அரசியல் கூட்டணி தயார்

ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய பங்காளிக் கட்சிகள் இணைந்து புதியதோர் அரசியல் கூட்டணியை உருவாக்கவுள்ளனர்.

இந்த  கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்  வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கூட்டணியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் 21 ஆம் திகதி  அறிவிக்கப்படும் எனவும்,  விமல் வீரவன்ச எம்.பி தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, வாசுதேவ நாணயக்கார எம்.பி தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி, உதய கம்மன்பில எம்.பி தலைமையிலான பிவிதுரு ஹெல உறுமய, இலங்கை கம்யூனிஸ் கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி, யுதுகம அமைப்பு, எமது மக்கள் சக்தி உட்பட மேலும் சில கட்சிகளும், தேசியவாத அமைப்புகளும் கூட்டணியில் ஒன்றினையும் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் தலைமையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க முடியாது எனவும், நாட்டின் அடுத்தக்கட்ட அரசியல் செயற்பாடுகளை தீர்மானிக்கும் விதமான முடிவுகள் இப்போதே எடுக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கும் அவர், மாற்று அரசியல் சக்தியாக தாம் உருவாவதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இத்தாலிக்கு சென்றார் கர்தினால் மல்கம் ரஞ்சித்

எதிர்வரும் 26ஆம் திகதி வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும்...

பொரளை பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் கடும் வாகன நெரிசல்

பொரளை மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து...

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுக்குள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை நிலைமை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.     அந்த...

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நேற்றிரவு (22) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373