கொட்டாஞ்சேனையில் வர்த்தகரிடம் பணம், ஆபரணங்கள் உள்ளிட்டவை கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவத்தில் 13,760,000 ரூபாவும் பல ஆபரணங்களும் கொள்ளையிடப்பட்டிருந்த நிலையில், கைதான சந்தேக நபர்களிடமிருந்து 854,000 ரூபா பணமும் சில ஆபரணங்களும் கைப்பற்றப்பட்டாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.