Date:

இணைய வழியில் இன்று முதல் பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்கள்

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுச் சான்றிதழ்களை இணைய வழியில் இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சான்றிதழ்களை இணைய வழியில் மூலம் பெற்றுக் கொள்வதற்காகக் கையடக்க தொலைப்பேசி மற்றும் கணினி வழியாக ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம் அத்துடன், கிரெடிட் அட்டைகளைப் பயன்படுத்தி இதற்கான கட்டணங்களைச் செலுத்த முடியும்.
விரைவுத் தபாலில் அல்லது மிக அருகாமையில் இருக்கும் பிரதேச செயலகத்திலோ சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
https://online.ebmd.rgd.gov.lk என்ற இணைய தளத்திற்குள் பிர வேசித்து சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கான கோரிக் கையைச் சமர்ப்பிக்க முடியும் என்பதுடன் www.rgd.gov.lk என்ற இணைய தளத்திலும் 011 2889518 என்ற தொலைபேசி இலக்கத் துடன் தொடர்பு கொள்வதன் மூலமும் இது தொடர்பான தகவல் களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

36 நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 36 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 52க்கும் மேற்பட்ட...

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள...

மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்ப்பு – பிரதமர்

மாகாண சபைகள் தேர்தலை விரைவில் நடத்துவதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்றும், அதற்கு...

வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன,பணியில் இருந்து இடைநீக்கம்

இலங்கை தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன, முதற்கட்ட...