Date:

இணைய வழியில் இன்று முதல் பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்கள்

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுச் சான்றிதழ்களை இணைய வழியில் இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சான்றிதழ்களை இணைய வழியில் மூலம் பெற்றுக் கொள்வதற்காகக் கையடக்க தொலைப்பேசி மற்றும் கணினி வழியாக ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம் அத்துடன், கிரெடிட் அட்டைகளைப் பயன்படுத்தி இதற்கான கட்டணங்களைச் செலுத்த முடியும்.
விரைவுத் தபாலில் அல்லது மிக அருகாமையில் இருக்கும் பிரதேச செயலகத்திலோ சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
https://online.ebmd.rgd.gov.lk என்ற இணைய தளத்திற்குள் பிர வேசித்து சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கான கோரிக் கையைச் சமர்ப்பிக்க முடியும் என்பதுடன் www.rgd.gov.lk என்ற இணைய தளத்திலும் 011 2889518 என்ற தொலைபேசி இலக்கத் துடன் தொடர்பு கொள்வதன் மூலமும் இது தொடர்பான தகவல் களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607ஆக அதிகரித்தது

இன்று மாலை 6 மணிவரையான நிலவரப்படி, இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

2026 வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் 157 மேலதிக...

பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல்...

தாஹிர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

நெய்னா தம்பி மரிக்கார் மொஹம்மட் தாஹிர் பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில்...