Date:

இணைய வழியில் இன்று முதல் பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்கள்

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுச் சான்றிதழ்களை இணைய வழியில் இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சான்றிதழ்களை இணைய வழியில் மூலம் பெற்றுக் கொள்வதற்காகக் கையடக்க தொலைப்பேசி மற்றும் கணினி வழியாக ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம் அத்துடன், கிரெடிட் அட்டைகளைப் பயன்படுத்தி இதற்கான கட்டணங்களைச் செலுத்த முடியும்.
விரைவுத் தபாலில் அல்லது மிக அருகாமையில் இருக்கும் பிரதேச செயலகத்திலோ சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
https://online.ebmd.rgd.gov.lk என்ற இணைய தளத்திற்குள் பிர வேசித்து சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கான கோரிக் கையைச் சமர்ப்பிக்க முடியும் என்பதுடன் www.rgd.gov.lk என்ற இணைய தளத்திலும் 011 2889518 என்ற தொலைபேசி இலக்கத் துடன் தொடர்பு கொள்வதன் மூலமும் இது தொடர்பான தகவல் களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உயர்தர பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் | அமைச்சரவை முடிவு தீர்மானம்!

கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பொருளியல் விஞ்ஞான வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம்...

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, ஒப்பிடுகையில், இலங்கையில்...

ஊவா மாகாண பாடசாலைகளுக்கு பூட்டு!

ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் காலவரையின்றி மூடப்படவுள்ளதாக ஊவா மாகாண...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு? | விசாரணை தேவை !

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சில வினாத்தாள்கள் கசிந்துள்ளதா என்பதை உறுதி செய்ய...