Date:

பொலிஸ் நிலையத்தில் நபரொருவர் மீது கத்திக் குத்து-ஒருவர் உயிரிழப்பு

நவகமுவ பொலிஸ் நிலையத்தில் நபரொருவர் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் 52 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவிசாவளை கரவனெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாகவும், கொலயைச் செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட தகராறு தொடர்பான முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்வதற்காக பெண் ஒருவரும் ஆணும் நவகமுவ பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் முன்னாள் காதலரும் முறைப்பாடு குறித்த விசாரணை நடத்த அழைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு அந்த பெண்ணின் தற்போதைய காதலன், முன்னாள் காதலனை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான நபர் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மட்டக்குளியில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது

மட்டக்குளிய சமித் பகுதியில் T-56 துப்பாக்கியை வைத்திருந்த மட்டக்குளியவைச் சேர்ந்த 36...

நாளை முதல் சில பகுதிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள ரயில் சேவைகள்

பொசன் பண்டிகையை முன்னிட்டு ரயில் திணைக்களம் விசேட ரயில் சேவைகளை இயக்கவுள்ளதாக...

அதிகரிக்கப்படும் சீமெந்து மூட்டையின் விலை?

50 கிலோ சீமெந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக...

மரைன் டிரைவ் வீதியோர உணவு விற்பனைநிலையங்கள் மீது நடவடிக்கை

மரைன் டிரைவில் இயங்கும் பல வீதியோர உணவு விற்பனை நிலையங்கள், சரியான...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373