லிந்துலை பிரதேசத்தில் மலைப் புலியொன்று கூரையை உடைத்து வீட்டினுள் வீழ்ந்துள்ளது.
இச்சம்பவம் லிதுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோகி தோட்டத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பதிவாகியுள்ளது.
எனினும் இரவு 10 மணியளவில் புலி வீட்டினுள் வீழ்ந்ததையடுத்து வீட்டில் இருந்தவர்கள் வீட்டில் இருந்து தப்பி உயிர் பிழைத்துள்ளனர்.
பின்னர் புலி தப்பிச் செல்ல முடியாதவாறு வீட்டின் ஜன்னல், கதவுகள் அனைத்தையும் பூட்டிவிட்டு இது தொடர்பாக வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.