பிரதி அமைச்சர் தலைமையில் அமைந்தது புதிய வைத்தியர் குழு!

வைத்திய அதிகாரிகளுக்காக இடைநிலைத் தரநிலை ஒன்றை உருவாக்குவது குறித்த யோசனையை ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக 6 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

 

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் பணிப்புரைக்கு அமைவாக, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்கவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

இந்தக் குழுவின் தலைவராகச் சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

குழுவின் செயலாளராக வைத்தியர் அமில சுரங்க நியமிக்கடைந்துள்ளதுடன், வைத்தியர் டபிள்யூ.கே. விக்ரமசிங்க, வைத்தியர் சமிந்த சமரகோன், சிரேஷ்ட பேராசிரியர் எச்.டி.என்.பி. ஓபாத மற்றும் சிரேஷ்ட பேராசிரியர் திலீப் டி சில்வா ஆகியோர் இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

 

இந்த நிபுணர் குழுவின் மூலம் இடைநிலைத் தர நிலையை வரையறை செய்தல், அதில் உள்ளடங்கும் மருத்துவ நிபுணத்துவத் துறைகளை அடையாளம் காணுதல், வைத்திய அதிகாரிகளை உரிய துறைக்குத் தெரிவு செய்யும் நடைமுறை, அவர்கள் அங்கு சேவை ஆற்ற வேண்டிய கால எல்லை, அவர்களுக்கு உரித்தாகும் நன்மைகள் மற்றும் இடமாற்றச் செயற்திட்டம் குறித்து விரிவான ஆய்வொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

உரிய தொழிற்சங்கங்கள் மற்றும் பங்குதாரர்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொண்டு ஒரு மாதத்திற்குள் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சிடம் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு அந்தக் குழுவிற்குக் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

பிரியங்கர ஜயரத்னவிற்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு...

இலங்கைக்கு ஐ.நா.வின் சிவப்பு எச்சரிக்கை : எல் நினோவால் பெருமழை சாத்தியம்!

தற்போது நிலவும் எல் நினோ காலநிலை நிலைமை காரணமாக, இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையில் அதிக மழைவீழ்ச்சி பதிவாவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக...