நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவத்திற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் – சஜித்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்திற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

25 உயிர்களைப் பலிகொண்ட இச்சம்பவம் தொடர்பில் அவர் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

​விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ள சஜித் பிரேமதாச, சிறைச்சாலை நிர்வாகத்தின் வீழ்ச்சி மற்றும் திறமையின்மையே இந்த உயிரிழப்புகளுக்கும் காயங்களுக்கும் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

​சிறைச்சாலைகளுக்குள் மரணங்கள் நிகழ்ந்தால் அதற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என தற்போதைய ஜனாதிபதி முன்னதாக எதிர்க்கட்சியில் இருந்தபோது தெரிவித்திருந்ததை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

அதே கொள்கை தற்போதைய நிர்வாகத்திற்கும் பொருந்தும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

சிறைச்சாலை மோதல்: உயிரிழந்த அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து, நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு சிறைச்சாலை அதிகாரி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர்...

இலங்கை விமானப்படை நாடு தழுவிய சிறப்பு டெங்கு ஒழிப்புத் திட்டம்

இலங்கை விமானப்படை நாடு தழுவிய சிறப்பு டெங்கு ஒழிப்புத் திட்டத்தைத் தொடங்குகிறது. பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின்படியும், இலங்கை விமானப்படைத் தளபதியின் நேரடி மேற்பார்வையின் கீழும்,...