Date:

லேடி ரிட்ஜ்வேயில் நிறைந்து வழியும் கொரோனா தொற்றாளர்கள்

கொரோனா தொற்று காரணமாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது என்று அந்த வைத்தியசாலையின் குழந்தைநல விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஒரு வாரத்துக்கு முன்னர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 30 சிறுவர்கள் மட்டுமே ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இந்த விடயத்தில் பெற்றோர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தடுப்பூசி போடப்படாத சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதால் கடுமையான பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், இந்த நாட்களில் கொரோனா பாதிக்கப்பட்ட சிறுவர்களிடையே பல உறுப்பு தொற்று என்ற ஒரு நோய் பரவி வருவதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்பாக இந்த நாட்களில் பரவி வரும் கடுமையான டெல்டா திரிபு காரணமாக, சிறுவர்களிடையே கொரோனா பரவ வாய்ப்புகள் அதிகம் என்றும் தெரிவித்தார்.

சிறுவர்களைக் கொண்ட வீடுகளில் உள்ள பெரியவர்கள், வெளியிலிருந்து வைரஸை வீட்டுக்கு கொண்டு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், முடிந்தவரை சிறுவர்களின் வெளி உலகத் தொடர்பைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கொரோனா தொற்றுக்குள்ளான பத்து குழந்தைகள் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இனவாதத்திற்கு எதிராக, சிங்கப்பூர் போன்ற இறுக்கமான சட்ட மாற்றத்தை கொண்டுவாருங்கள் நாம் ஆதரவு வழங்குவோம் – ஜனாதிபதியிடம் றிஷாட் பதியுதீன் வலியுறுத்தல்!

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, இனவாதம் மற்றும் மதவாதங்களை கையிலெடுக்கும் மதத்தலைவர்கள்,...

Breaking update கடுகன்னாவ மண்சரிவு – பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின்...

பேருவளை கெச்சிமலை தர்காவில் புனித புஹாரி – முஸ்லிம் தமாம் மஜ்லிஸ்

வரலாற்று பிரசித்தி பெற்ற பேருவளை கெச்சிமலை தர்ஹாவில் நடைபெற்று வரும் வருடாந்த...

ஜனாதிபதியுடன் சிறுபான்மை கட்சித் தலைவர்களின் முக்கிய கூட்டம் – ரவுப் ஹக்கீம் பங்கேற்க்க மாட்டார்

பாராளுமன்றத்தை பிரதிநித்துப்படுத்தும் சிறுபான்மை கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீ லங்கா...