Date:

லேடி ரிட்ஜ்வேயில் நிறைந்து வழியும் கொரோனா தொற்றாளர்கள்

கொரோனா தொற்று காரணமாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது என்று அந்த வைத்தியசாலையின் குழந்தைநல விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஒரு வாரத்துக்கு முன்னர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 30 சிறுவர்கள் மட்டுமே ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இந்த விடயத்தில் பெற்றோர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தடுப்பூசி போடப்படாத சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதால் கடுமையான பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், இந்த நாட்களில் கொரோனா பாதிக்கப்பட்ட சிறுவர்களிடையே பல உறுப்பு தொற்று என்ற ஒரு நோய் பரவி வருவதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்பாக இந்த நாட்களில் பரவி வரும் கடுமையான டெல்டா திரிபு காரணமாக, சிறுவர்களிடையே கொரோனா பரவ வாய்ப்புகள் அதிகம் என்றும் தெரிவித்தார்.

சிறுவர்களைக் கொண்ட வீடுகளில் உள்ள பெரியவர்கள், வெளியிலிருந்து வைரஸை வீட்டுக்கு கொண்டு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், முடிந்தவரை சிறுவர்களின் வெளி உலகத் தொடர்பைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கொரோனா தொற்றுக்குள்ளான பத்து குழந்தைகள் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட...

‘டித்வா’ அனர்த்தம் | மாற்றுக் காணி வழங்கும் திட்டம்!

'டித்வா' புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்துக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக்...

50 மி.மீக்கும் அதிக மழை

இன்று (13) வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல்...

அசோக ரன்வல பிணையில் விடுவிப்பு

சப்புகஸ்கந்த பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது...