இலங்கையில் மின்சார அலகுகளின் பாவனை 20 வீதத்தினால் குறைந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சுமார் 06 மாதங்களுக்கு முன்னர் மின் பாவனையாளர்கள் நாளொன்றுக்கு 48 மில்லியன் அலகுகள் மின்சாரத்தை பயன்படுத்தி வந்த போதிலும், தற்போது 38 மில்லியனாக குறைந்துள்ளதாக இந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
இதற்குக் காரணம், பல மாதங்களாக நிலவும் மின்வெட்டு மற்றும் நுகர்வோரின் குறைந்தளவான மின்பாவனையே எனவும் அவர் குறிப்பிட்டார்.