Date:

எனது தொலைபேசி 24 மணி நேரமும் ஒட்டு கேட்கப்படுகிறது-டலஸ்

இந்த நாட்டில் ஒரு பெரிய மாற்றம் நிகழும் என்று இந்த மக்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். அந்த நம்பிக்கைக்கு உயிர் கொடுக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை. ஆனால் நாட்டில் கடந்த செவ்வாய்க் கிழமைக்கு பின் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும் என நேற்று (01) ஒளிபரப்பான தெரண 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகஸ்பெரும தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் டலஸ் இன்னும் பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
எனது தொலைபேசி 24 மணிநேரமும் ஓட்டுக்கு கேட்கப்படுகிறது. இதற்கு யார் உத்தரவிட்டார்கள் என்பதை இனி வரும் காலங்களில் வெளிப்படுத்துவேன்!
செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இருந்து என்ன நடக்கிறது என்பது நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

சர்வதேச நாணய நிதியத்தால் கூட அந்த பெரிய செயல்பாடுகளை கையாள முடியும் என்று நான் நினைக்கவில்லை. இதை வரலாறு பதிவு செய்யும். நீதி இல்லாத நாட்டிற்கு எதிர்காலம் இல்லை. இந்த நிலையை ஏற்படுத்தியவர்கள் மக்கள் அல்ல. அரசியல்வாதிகளே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பேருவளை நகர சபை உறுப்பினர்களின் திடீர் தீர்மானம்!

இன்று (19) மாலை ஆரம்பிக்கப்படவிருந்த பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக...

70 வயது காதலியின் தங்க நகைகளை கொள்ளையிட்ட 30 வயது காதலன்!

தனது 70 வயது காதலியிடம் இருந்து ரூ. 1 இலட்சத்து 60,000...

ஈரானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்!

ஈரானில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகம்...

துமிந்த திசாநாயக்கவுக்கு எதிரான இன்றைய நீதிமன்றத் தீர்ப்பு!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூன் 26 ஆம் திகதி வரை...