இந்த நாட்டில் ஒரு பெரிய மாற்றம் நிகழும் என்று இந்த மக்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். அந்த நம்பிக்கைக்கு உயிர் கொடுக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை. ஆனால் நாட்டில் கடந்த செவ்வாய்க் கிழமைக்கு பின் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும் என நேற்று (01) ஒளிபரப்பான தெரண 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகஸ்பெரும தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் டலஸ் இன்னும் பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
எனது தொலைபேசி 24 மணிநேரமும் ஓட்டுக்கு கேட்கப்படுகிறது. இதற்கு யார் உத்தரவிட்டார்கள் என்பதை இனி வரும் காலங்களில் வெளிப்படுத்துவேன்!
செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இருந்து என்ன நடக்கிறது என்பது நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும்.
சர்வதேச நாணய நிதியத்தால் கூட அந்த பெரிய செயல்பாடுகளை கையாள முடியும் என்று நான் நினைக்கவில்லை. இதை வரலாறு பதிவு செய்யும். நீதி இல்லாத நாட்டிற்கு எதிர்காலம் இல்லை. இந்த நிலையை ஏற்படுத்தியவர்கள் மக்கள் அல்ல. அரசியல்வாதிகளே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.