காலி-ரத்கம-கம்மெதகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் (48 வயது) உயிரிழந்ததோடு, 3 பேர் காயமடைந்துள்ளனர்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அடையாளம் தெரியாத இருவர் வீடொன்றுக்குள் நுழைந்து இ்வவாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.