போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்த பின் சேதமடைந்த மேல் தளத்துக்குச் செல்லும் படிகளைப் புனரமைக்க பத்து கோடி ரூபாவுக்கு மேல் செலவாகும் என தொல்லியல் துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தொல்லியல் மதிப்புள்ள படிக்கட்டு சேதமடைந்துள்ளதால், புதிதாக சீரமைக்க வேண்டும்.
இந்தப் படிகள் தொல்லியல் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் புனரமைக்கப்படவுள்ளன.
இங்குள்ள தொல்லியல் பெறுமதிமிக்க சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைக் கணக்கிட முடியாது என அதிகாரிகள் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.