எதிர்வரும் நாட்களில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் திறந்த கணக்கின் ஊடாக அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.