Date:

லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

நாட்டில் இன்றும் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் 1 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், கொழும்புக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு 25 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், கொழும்பு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு 75 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் எனவும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் நாட்டுக்கு தொடர்ச்சியாக எரிவாயுவைக் கொண்டு வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் எரிவாயு பற்றாக்குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும் எனவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கல்கிசை குழு மோதலில் ஒருவர் பலி – மற்றொருவர் படுகாயம்

கல்கிஸ்சை பொலிஸ் பிரிவின் அரலிய வீட்டுவசதிப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட...

போர் அவளிடம் அழுவதற்கான சக்தியைக் கூட பறித்துவிட்டது

காசாவின் ஷேக் ரத்வான் பகுதியில், 6 வயது மிஸ்க் எல்-மெதுன் அமைதியாகக்...

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு முடிவு

மியன்மாரில் 4 ஆண்டுகளாக உள்ள இராணுவ அவசர நிலை முடிவுக்கு கொண்டு...

விமர்சிக்கப்பட வேண்டியது சவூதியா?

  எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.   சமகாலத்தில் உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கும் நிகழ்வு...