Date:

தங்காலை நகர சபையின் புதிய தலைவர் பதவியேற்பு

தங்காலை நகர சபையின் புதிய தலைவர் W.P.ஆரியதாச பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் இன்று (29) முற்பகல் அலரி மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார்.

சமுத்திர பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற ஆலோசகரான ஆரியதாச மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நகரசபை உறுப்பினராக சேவையாற்றியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தலைவர் ரவிது வெதஆராச்சி அக்கட்சியினால் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக W.P.ஆரியதாச இரகசிய வாக்கெடுப்பின் மூலம் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

ஆரியதாசவின் பதவியேற்பின்போது விமானச் சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் D.V.சானக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம், பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன உள்ளிட்ட தங்காலை நகர சபை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தாழிறங்கும் பிரதான வீதி | போக்குவரத்துத் தடங்கல்..!

பசறையிலிருந்து மடுல்சீமைக்கு செல்கின்ற பிரதான வீதியில் இரண்டாம் கட்டை பகுதியில் ஏற்பட்டுள்ள...

கடவத்தை ஊடாக கொழும்பு – கண்டி வீதியைப் பயன்படுத்துவோருக்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்!

கட்டுமானப் பணிகள் காரணமாக கொழும்பு - கண்டி வீதியின் கடவத்தை பகுதியில்...

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளையே இலங்கையை…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்,...

கண்டி வீதியில் இரண்டு பேருந்துகளும் லொறி ஒன்றும் மோதி இடம்பெற்ற பாரிய விபத்து..!

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பல்பாத பகுதியில் இன்று (09)...