ரயில் கட்டண திருத்தம் நாளை நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தபபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் கையொப்பத்துடன் வர்த்தமானி வெளியிடப்பட்டது.
இதன்படி, பயணிகள் போக்குவரத்து, கொள்கலன் போக்குவரத்துக்கான ரயில் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கட்டண திருத்தம் நாளை நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் , வெளிநாட்டு தபால் கட்டணங்களை எதிர்வரும் மாதம் முதலாம் திகதி
முதல் திருத்தியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ரயில் கட்டண அதிகரிப்பானது கட்டணம் பஸ் கட்டணத்தில் அரைவாசியாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.