Date:

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் உப அலுவலகங்கள் அமைப்பதற்கான நடவடிக்கை

நாட்டின் அனைத்து மாவட்ட செயலகங்களிலும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உப அலுவலகங்கள் உடனடியாக ஸ்தாபிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரியொருவரை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உப அலுவலகங்களை அமைப்பதற்கு தற்போது மாவட்ட செயலகங்களில் இடம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஏற்கனவே மாவட்ட செயலகங்களில் இருந்து கடவுச்சீட்டுகளை இணையத்தில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தில் நெரிசலைக் குறைக்கும் வகையில்  இவ்வாறு உப அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தங்க விலையில் இன்றும் அதிகரிப்பு – புதிய விலை இதோ

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து வருவதன் காரணமாக இலங்கையில்...

புதிய 2,000 ரூபாய் நாணயத்தாளிலுள்ள அம்சங்கள்

நாட்டின் நடைமுறையிலுள்ள 2,000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது. இலங்கை...

ரமழான் சிறப்பு சுற்றறிக்கை வெளியானது

வரவிருக்கும் ரமழான் காலத்தில் மத அனுஷ்டானங்களை நிறைவேற்ற பொது அதிகாரிகளுக்கு சிறப்பு...

ஹல்துமுல்லையில் கோர விபத்து: சாரதி பலி

கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, ஹல்துமுல்லை -...