நாட்டின் அனைத்து மாவட்ட செயலகங்களிலும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உப அலுவலகங்கள் உடனடியாக ஸ்தாபிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரியொருவரை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உப அலுவலகங்களை அமைப்பதற்கு தற்போது மாவட்ட செயலகங்களில் இடம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஏற்கனவே மாவட்ட செயலகங்களில் இருந்து கடவுச்சீட்டுகளை இணையத்தில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தில் நெரிசலைக் குறைக்கும் வகையில் இவ்வாறு உப அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.